#இலங்கையின்_முதலாவது_செய்மதி
#விண்ணில்_பாய்ந்தது !!!
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை பொறியலாளர்கள் இருவரினால் நிர்மாணிக்கப்பட்ட “ராவணா-1” செய்மதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
18.04.2019 அதிகாலை 2.18 மணிக்கு
அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்தில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில இருந்து வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு குறித்த செய்மதி கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ராவணா-1 செய்மதியை இலங்கைப் பொறியியலாளர்களான தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா ஆகிய இருவர் இணைந்து நிர்மாணித்து கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்செயற்கைக்கோள் திட்டம் BIRDS 3 Satellite Project என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ராவணா – 1 செய்மதியானது, ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமும் 1.05 கிலோ கிராம் நிறையும் கொண்டதாகும்.
ராவணா – 1 செய்மதியானது, சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மே மாத இறுதியில் அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் இச்செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், செக்கனுக்கு 7.6 கிலோமீற்றர் வேகத்தில் நாளொன்றுக்கு 15 தடவைகள் பூமியை சுற்றி வரவுள்ளது.
இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ராவணா-1 செயற்கைக்கோளின் மூலம்
இலங்கை மற்றும் அதனை அண்மித்துள்ள வலய நாடுகள் புகைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயன்பாட்டு திட்டங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆர்த்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய இந்த செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு 'ராவணா-1" என பெயர் சூட்டிப்பட்டுள்ளது.
ராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, April 25, 2019
Subscribe to:
Post Comments (Atom)
#உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...
-
*கல்வி தொடர்பான மாநாடுகள்* 1- *"ஜொம்ரியன் மாநாடு* " இதன் நோக்கு "யாவருக்கும் கல்வி " 1990 ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற...
-
For principal service and sleas 1) இல்ங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது? : மத்துகம 2)மத்திய மகாவித்தியால...
-
🕸🕸🕸🕸🕸🕸🕸 *1 PAN* -Permanent Account Number *2. PDF*-Portable Document Format *3. HDFC -*-Housing Development Finance Corporation *...
No comments:
Post a Comment